வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - பாகம் 2

By TNTJ

மூளை வெந்த ஹிஜ்ரா கமிட்டிக்கு பதிலடி! ( பாகம் 2 )

மடமைவாதம் ஒன்று :
---------------------------------------------------------------------------
பெருநாள் தொழுகையில் கூட்டம் காட்டுவதற்காகத்தான் பிறை விஷயத்தில் டிஎன்டிஜே இந்த நிலைப்பாட்டை எடுத்ததா?

--------------------------------------------------------------------------

இவர்களது மறுப்புரையின் துவக்கத்திலேயே மதி கெட்ட கேள்வி ஒன்றைக் கேட்டு அனைவரையும் வியப்பில் (?) ஆழ்த்தியுள்ளனர்.

அதாவது, சுன்னத் (?) ஜமாஅத் போன்ற மற்ற மற்ற இயக்கங்களை உங்கள் மேடைகளில் ஏற்ற மாட்டீர்கள், அவர்களுடன் சேர்ந்து சமுதாயப் பிரச்சனைகளுக்காக போராட மாட்டீர்கள், ஆனால் அவர்கள் பெருநாள் கொண்டாடும் தினத்தில் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவீர்களோ? இது முரண்பாடில்லையா?

என்பது தான் அந்த அசத்தல் கேள்வி.

நமது பதில்
சுன்னத் (?) ஜமாஅத்தினர் ஒரு தினத்தில் ஒன்றைச் செய்தால் அதே தினத்தில் நாமும் அதையே செய்வது இவர்கள் பார்வையில் ஒரே மேடையில் இணைந்து போராட்டங்களைச் சந்திப்பது போன்றதாம்.

சுன்னத் (?) ஜமாஅத்தினர் காலையில் எழுந்ததும் பல் விளக்குவார்கள், தவ்ஹீத் ஜமாஅத்தினரும் பல் விளக்குகிறார்கள்..
ஒரே மேடையில் இணைந்து போராட்டங்களைச் சந்திக்க மாட்டார்களாம், ஆனால் அவர்கள் பல் விளக்கும் அதே நாளில் இவர்கள் பல் மட்டும் விளக்குவார்களோ??
இந்த முரண்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளக்குவார்களா? என்று அடுத்து இந்த கூறு கெட்டவர்கள் அறிக்கை விட்டாலும் விடுவார்கள் போல..

இதற்கு நாம் கூடுதல் விளக்கம் எதையும் சொல்லத் தேவையில்லை.

சுன்னத் ஜமாஅத்தினர் ஐந்து வேளை தொழுவது போல் நீங்களும் தொழுகிறீர்களே என்பது போன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டாலும் கேட்பார்கள்.

மடமை வாதம் இரண்டு
தொடர்ந்து இவர்களது மற்றுமொரு உளறலை பாருங்கள்.

அதாவது, சுன்னத் (?) ஜமாஅத்தினருடன் நாம் ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடுவதே தொழுகையின் போது நம் திடலில் அவர்களும் கலந்து கொண்டு அதன் மூலம் அதிகக் கூட்டம் வர வேண்டும் என்பதால் தானாம்.

நமது பதில்

இவர்களுக்கு மார்க்கமும் தெரியவில்லை. உலகத்தில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற விபரமும் இல்லை என்பதற்கு இவர்களது இத்தகைய கூன் விழுந்த வாதமே சான்று.

சுன்னத் (?) ஜமாத்தினர் எவரும் திடலில் தொழுகை நடத்த வேண்டும் என்பதில் உறுதியான நிலைபாட்டைக் கொண்டவர்கள் கிடையாது. எந்தப் பெருநாட்களிலும் பெருவாரியான ஜமாத்தார்கள் அவரவர்களுக்கு இருக்கும் பள்ளிவாசல்களில் தான் பெருநாள் தொழுகை நடத்துகின்றனர்.
நபி வழியைப் பேண வேண்டும் என்கிற கொள்கை கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் தான் ஒவ்வொரு வருடமும் தொழுகைக்காக திடல் ஏற்பாடு செய்வதற்கு அதிகப் பிரயத்தனம் எடுக்கிறார்கள். அவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் திடலில் வந்து குழுமும் முஸ்லிம்கள் அனைவரும் ஏகத்துவ கொள்கையுடையவர்கள் தானே தவிர, சுன்னத் (?) ஜமாஅத்தினர் கிடையாது.

கூட்டத்தைக் காட்டுவதற்காகத் தான் நாம் இவ்வாறு அவர்கள் பெருநாள் கொண்டாடும் தினத்தில் கொண்டாடுகிறோம் என்று இவர்கள் கூறியிருப்பதன் மூலம், இது நாள் வரை இவர்களது உள்ளத்தில் ஒளிந்திருந்த கெட்ட எண்ணமொன்று இவர்களையும் அறியாமல் வெளியே தலை காட்டியுள்ளது.

ஹிஜ்ரி என்றும், காலண்டர் என்றும், விஞ்ஞானம் என்றும் அமாவாசை என்றும் மக்களிடையே குழப்பம் விளைவித்து, ஒட்டு மொத்த சமுதாயம் அனுசரிக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக இவர்கள் மாதங்களைத் துவங்குவதன் நோக்கமெல்லாம் குர்ஆன் ஹதீஸ் இல்லை, மாறாக, நாங்களும் இருக்கிறோம், எங்களுக்கு என்று இயக்கம் இருக்கிறது, லெட்டர் பேடெல்லாம் உள்ளது, எங்களுடன் தனியாகத் தொழுவதற்கும் கூட்டம் சேரும் என்பதைச் சமுதாயத்திற்குக் காட்ட வேண்டும். அது தான் நோக்கம் என்பது இவர்கள் நம்மை நோக்கி வைத்த விமர்சனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது - பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது !

அதோடு மட்டுமல்லாமல் பிறை விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடுதான் சரி என்பதை ஆய்வு செய்து உணர்ந்த மக்கள் வெள்ளத்தை திடலில் வந்து பெருநாள் தொழுகை தொழும் கூட்டத்தைக் கண்டு இவர்களது வயிற்றெரிச்சல் அதிகமாகியுள்ளது என்பதும் இதன் மூலம் வெளிப்பட்டுவிட்டது.

அவர்களோடு இணைந்து பெருநாள் கொண்டாடுவது கூட்டம் காட்டுவதற்காகத்தான் என்பது உண்மையாக இருக்குமேயானால் சில வருடங்களுக்கு முன்பாக டவுன் ஹாஜி குல்பர்காவிலும், மாலேகானிலும் பிறை பார்த்ததாக தகவல் சொன்ன போது தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து அதாவது தத்தமது பகுதியிலிருந்து பிறை பார்க்கப்பட்டால்தான் அதை ஏற்றுக்கொள்வோம் என்று கூறி உறுதியாக நின்று தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடினார்களா? இல்லையா?

இது இந்த மூளை வெந்த கூட்டத்திற்கு தெரியுமா? தெரியாதா? இந்த நிகழ்வே இவர்கள் பொய்யர்கள் என்பதை உண்மைப்படுத்திவிட்டது.


சாட்டையடி பதில்கள் அடுத்தடுத்த ஆக்கங்களில் தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக